search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வாரிய ஊழியர் பலி"

    பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே லாரி மோதியதில் குடிநீர் வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 39). மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் வந்த போது திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி திடீரென சாலை தடுப்பை தாண்டி எதிர் திசையில் தாறுமாறாக ஓடி சேகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சேகரை மீட்டு வெள்ளியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது டாக்டர் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து சேகரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வெள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியில் இல்லாததே சேகர் உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வெள்ளியூர் ஆஸ்பத்திரி முன்பு சேகரின் உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரபாகரன், துணை தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #Tamilnews
    ×